Wednesday, March 30, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 10

மக்களின் அறியாமை
காங்கிரசின் கடந்த தலைவராக இருந்த அம்பிகா சரண் மஜும்தார் எனது பழைய நண்பர் ஆவார். நாம் சுய ஆட்சியைப் பெறுவதற்கு முன்பு நமது மக்கள் அனைவரும் போதுமான அளவிற்குக் கற்பிக்கப்பட வேண்டும் என்பது தேவையில்லாதது என்று ஒரு பேச்சில் அவர் குறிப்பிட்டார். அரசின் தலைமைப் பொறுப்பில் கற்றறிந்த ஒரு பிரிவு மக்கள் இருப்பார்கள்.  அரசை நடத்திச் செல்லும் அவர்கள்  பொது மக்கள் மற்றும் அயல் நாட்டினரின் நலன்களை பார்த்துக் கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.  சுயஆட்சி பற்றிய அனைத்துக் கோரிக்கைகளும் அதன் அடிப்படையில் அமைந்தவை என்பதால்,  அந்த அறிவிப்பு பரிசீல னைக்கு உகந்தது. வாக்கு உரிமையைப் புரிந்து கொள்வதற்கு போதுமான கல்வியறிவை நம் நாட்டு மக்களில் பெரும்பாலோர் பெற்றிருக்கவில்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
தனிக் குழுவின் கொடுங்கோல் ஆட்சிக்கு அதிகார மாற்றம்
அதனால்,  பாமர மக்கள் அனை வரது நலன்களையும் அவர்களைவிட மேலான ஒரு பிரிவு மக்கள் கவனித்துக் கொள்வார்கள் என்பதுதான் சுய ஆட்சி என்பதன் உண்மையான பொருளாகும். அதில் பல ஆபத்துகள் உள்ளன. இத்தகைய நிலை எங்கெல்லாம் ஏற்பட்டதோ, அங்கெல்லாம் சுய ஆட்சியை வரவேற்கத் தயாராக இருந்த உயர் பிரிவு மக்கள், காலப்போக்கில் அவர்களுக்குக் கீழே இருந்தவர்களை நசுக்கிவிட்டு, தங்கள் கைகளிலேயே அதிகாரத்தை வைத்துக்கொண்டு, வியப்பளிக்கும் வகையில் பிடிவாதமாக அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருந் தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. தங்கள் நாட்டின் அரசாங்கத்தில் தங்கள் பங்கை ஏற்றுக்கொள்ள மக்கள் தாங்களாகவே தயாரானபோது, புரவலர்களாக அதிகாரத்தில் இருந்த மக்கள்  அதிகாரத்தை விட்டுச் செல்ல சம்மதிக்கவேயில்லை.  அவ்வாறு இல்லாமல், பிரபுக்களிடம் இருந்து பொதுமக்களுக்கு அதிகாரம் அமைதி யான முறையில் மாற்றம் பெற்றது இங்கிலாந்து நாட்டில் மட்டும்தான்.   ரத்தம் சிந்தாமல், அமைதியான முறையில் அதிகார மாற்றம் நிகழ்ந்தது என்றுதான் நான் குறிப்பிடுகிறேன்.  அவர்களும் அரசியல் களத்தில் சண்டையிட்டுள்ளனர்; ஆனாலும் இரத்தம் சிந்தாமல் சண்டையிட்டுக் கொண்டனர்.  அமைதியான முறையில் அதிகார மாற்றம் நிகழ்ந்த ஒரே நாடு இங்கிலாந்து மட்டும்தான்.  பிரான்சில் புரட்சி நடந்தது. மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஜெர்மனிதான்.  ஜெர்மனியில் இன்றும் உண்மையான மக்களாட்சி உரு வாகவில்லை. ஜெர்மனியில் அதிகாரம் கொடுங்கோல் ஆட்சி புரியும் ஒரு சிலரின் கைகளில் மட்டுமே உள்ளது. பேரரசரையும் அவர்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்துள் ளனர்; அதே போல் மற்ற அனைத்தையும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்தக் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் தான் பேரழிவை ஏற்படுத்தும் உலகப் போரைக் கொண்டு வந்தவர்கள்.  போர் முடிந்த பிறகு, ஜெர்மனியில் மக் களாட்சி மலர்வதற்கு நேசநாடுகளின் உதவியை ஜெர்மனியர் கேட்டுப் பெற வேண்டிய நிலை உருவாகும். நம்பிக்கைக்குரிய ஒரு பிரிவினரிடம் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு, பின்னர் ஒரு நாளில் மக்கள் ஆட்சி அதிகாரத்தைச் செலுத்த தாங்களே தகுதி பெற்ற நிலையில், அதிகாரத்தை எடுத்துக் கொள்வது என்பதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன. இவ்வாறு தற்காலிகமாக அதிகாரத்தை ஒப்படைக்காமல் இயங்க உங்களால் முடிந்தால், அவ்வாறே இயங்குங்கள்.  அய்ரோப்பிய நாடுகளில் அது தவிர்க்க முடியாதது. ஏதோ ஒரு வகையில் அங்கு செயல்பட்டுதான் ஆக வேண்டும். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. பிறரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது தவிர்க்க முடியாதது அல்ல.  சுய ஆட்சியின் செயல்பாடுகளைச் செய்ய இயன்ற நிலையில் பொதுமக்கள் கல்வி கற்பிக்கப்பட்டு, முன்னேற்றம் பெறச் செய்யப்படும் வரை அவர்களைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ள நம்மிடம் மிக நல்ல மனிதர்கள் உள்ளனர்.இந்த காப் பாளர்களிடம் இருந்து மற்ற காப்பாளர் களுக்கு அதிகாரம் மாற்றம் செய்யப்பட வேண்டியதன் தேவை,  மற்றும் மறுபடியும் அவர்களிடமிருந்து மக்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை என்ன? ஆங்கிலேய அரசு தாங்கள் மக்களின் வியக்கத்தகுந்த  பாதுகாவலர்கள் என்பதையும் அவர்களின் நலன்களைப் பேணும்  பிரதிநிதிகள்  என்பதையும் ஆங்கிலேய அரசு மெய்ப்பித்துள்ளது என்பதை எந்த இந்தியரும் மறுக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன். இந்நாட்டில் உள்ள படித்த மக்கள் இந்நாட்டு படிக்காத மக்களின் நல்ல பாதுகாவலர்களாக இருப் பார்கள் என்று நீங்கள் கூறுவீர்களே யானால், என்னதான் நடந்தது என்பது பற்றி ஒரு சில நிகழ்ச்சிகளை உங்களுக்கு எடுத்துக்காட்ட நான் விரும்புகிறேன். ஒரு முகமதிய சங்கத்தின் உறுப்பினர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். உங்களுடைய பெயர் மற்றும் நலன்கள் பற்றி பொதுத் தேர்வு ஆணையம் என்ன செய்தது என்று உங்களுக்குச் சுட்டிக் காட்ட நான் விரும்புகிறேன். ஒரே நேரத்தில் தேர்வு என்று நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வந்ததற்கு ஆதரவாக பொதுத் தேர்வு ஆணையத்தின் முன் இந்நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான கற்றறிந்த மக்கள் அளித்த சாட்சியம் அமைந்திருந்தது. இங்கிலாந்திலும், அதே நேரத்தில் இந்தியாவிலும் நடத்தப்படும் இந்திய சிவில் சர்வீஸ் பணிக்கான  தேர்வு அது. இத்தேர்வினை இந்தியாவிலோ, இங்கிலாந்திலோ எழுதலாம். அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரே பட்டியலில் தொகுக்கப்படுவார்கள். ஆனால் பெரும் அளவினான மக்கள் அதில் தவறு கண்டார்கள். இத்தகைய நடைமுறை யிலான தேர்வில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களே அரசுப் பணியில் சேர அனுமதிக் கப்படுகின்றனர் என்பதால் அதை அவர்கள் விரும்பவில்லை. அரசுப் பணியில் சேர்வது இந்த ஒரு அம்சத்திற்கு முக்கிய மானது.
அது அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருப்பது ஆகும்; அரசியல் அதிகாரம் பரவலாக வினியோகிக்கப்படாவிட்டால், அதில் எப்போதுமே ஆபத்து உள்ளது. கலப்பின மக்கள் வாழும் நாடுகளில் ஏற்பட்ட அனுபவம் இத்தகையதே. அதி காரத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கைகளில் நீங்கள் குவித்தால், மற்றொரு சமூகம் கொடுங்கோலாட்சிக்கு உட்படுத் தப்படும் ஆபத்தும், அதிகாரம் நிறைந்த சமூகத்தின் கொடுங்கோலாட்சி மற்றும் அடக்குமுறையை  எதிர்த்து  மற்ற சமூகத்தினர் போராடும் ஆபத்தும்  இருக்கிறது. ஆனால் இது பற்றி இரு வேறு கருத்துகள் இருந்தன. பொதுத் தேர்வு ஆணையம் இங்கே வந்தபோது, உங்கள் நலனைப் பார்த்துக் கொள்ளும் ஒரு முகமதிய பிரதிநிதி அதில் இருந்தார்.  இந்தியா முழுவதும் அந்த ஆணையம் சென்றுவிட்டு தனது அறிக்கையை அனுப்பிய பின்னர், முகமதிய பிரதிநிதி ஒருவர் மட்டுமே ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடக்கும் தேர்வுக்கு ஆதரவாக இருந்தார். மற்ற பிரதிநிதிகள் அனைவரும் அதற்கு எதிராக இருந் தார்கள்.
ஆவலைத் தோற்றுவிக்கும் அளவில், தான் சாட்சியம் அளித் துள்ளதாகக் கூறிய சென்னை பத்திரி கையைச் சேர்ந்த அவரது ஆதரவாளர் ஒருவரை நான் கண்டேன். அத்தகைய முக்கியமான ஒருவர் சாட்சியம் அளித் துள்ளார். பொதுப் பணித் தேர்வு ஆணையத்தின் அந்த பெரிய அறிக்கை யில் சாட்சியம் அளித்திருந்த 28 முகமதியர்களில் 7 பேர் ஒரே நேரத்தில் தேர்வு நடத்துவதற்கு ஆதரவாகவும், 15 பேர் எதிராகவும் சாட்சியம் அளித்தனர். மேலும் 4 பேர் ஒரே நேர தேர்வுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த போதும்,  தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களின் சமூகத்தைப் பொறுத்து தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியது உண்மையில் ஒரே நேர தேர்வுக்கு எதிரானதாகும். ஒரு கனவான் கூறினார் எனது சொந்த கருத்து ஒரே நேரத் தேர்வுக்கு ஆதர வானது. ஆனால் எனது சமூகத்தின் பிரதிநிதியாக நான் இங்கே இருக் கிறேன்; எனது சமூகம் அதற்கு எதிராக இருக்கிறது. வெளிப்படையான நாணய மான அறிவிப்பு அது. மாகாணப் பணியைச் சேர்ந்த  ஒரு கனவான்  இது பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்க வில்லை.  மாகாணங்களைப் பொறுத்த வரை உள்ள இடையூறுகளை பெரும் பான்மையான பொதுப்பணித் தேர்வு ஆணைய உறுப்பினர்கள் சுட்டிக்காட் டினர். சில மாகாணங்களில் சிலவற் றிற்கு எதிரான உணர்வுகள் மற்ற மாநிலங்களில் உள்ள உணர்வுகளை விட பலமாக உள்ளன. எனவே, முக மதிய கருத்து எவ்வாறு பிளவுபட்டுள்ளது என்பதைக் கவனிப்பது ஆர்வம் அளிப் பதாக உள்ளது.  தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

No comments:

Post a Comment