நடைமுறை சாத்தியமான சீர்திருத்தம்
அரசியல் சீர்திருத்தத்தைக் கேட்கும்போது, ஒன்றிரண்டு விஷயங்களை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்று- வெறும் உணர்வுகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்த, நடைமுறைப் படுத்தப்படும் சாத்தியக் கூறுகள் அற்ற ஒரு சீர்திருத்தம் எந்த நன்மையையும் அளிக்காது. நடைமுறை சாத்தியம் உள்ள, எவர் ஒருவராலும் நடைமுறைப் படுத்தப்பட இயன்ற ஒன்றைத்தான் நீங்கள் கேட்கவேண்டும். வெறும் உணர்வுகளின் அடிப்படையில் இது இது எங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் கேட்டால், அதற்கு எந்த அரசியல்வாதியும் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்; உங்களின் கோரிக்கை இங்கிலாந்து நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பகுத்தாய்வு செய்யப்படும் போது சுயஆட்சிக்குத் தகுதியானவர்கள் என்று கூறிக் கொண்ட மனிதர்கள் இவர்கள்தானா என்று அங்கிருக்கும் அரசியல்வாதிகள் கேட்கக்கூடும். ஆனால், இத்தகைய கோரிக்கைகளைக் கேட்பவர்கள், நடைமுறை சாத்தியமான செயல்களைச் செய்யும் மனிதர்களல்ல. எப்போதும் நீங்கள் பயப்பட வேண்டிய ஆபத்து அதுதான். உங்கள் கோரிக்கைகளை முன் வைக்கும்போது, அவை நடை முறை சாத்தியமானவையா என்பதை சோதித்துப் பாருங்கள்.
பத்தொன்பது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனு
ஹோம் ரூலைப் பற்றி பேச்சை விட்டுவிட்டு, நமது அடுத்த தவணை அரசியல் சீர்திருத்தத்திற்காக நான் கேள்விப்பட்ட நடைமுறை சாத்திய முள்ள திட்டத்தைப்பற்றிப் பேச விரும்பு கிறேன். ஆங்கிலப் பேரரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் பத்தொன்பது பேர் வைஸ்ராய் அவர்களுக்கு சமர்ப்பித்த கோரிக்கை மனு பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கக்கூடும். இந்த ஆவணத்தைப் பற்றிய வேறுபட்ட கருத்தை வெளியிட்ட மைக்காக நான் திட்டப்பட்டேன், தாக்கப்பட்டேன், கண்டணம் தெரிவிக் கப்பட்டேன். இந்த ஆவணத்தின் கருத் தில் இருந்து நான் மாறுபட்டிருந்தேன். நடைமுறை சாத்தியமற்ற, செயல்பட இயலாத திட்டம் அது என்பது எனது கருத்து. ஒரு சில நிமிடங்கள் எனக்கு அளித்தால், அம்மனுவின் திட்டங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் என்னால் மறுத்துப் பேச முடியும்.
நிருவாகக் குழு
முதல் செயல்திட்டமே நிருவாகக் குழுவைப் பற்றியது. வைஸ்ராயின் நிருவாகக் குழு மற்றும் மாகாண ஆளுநர் களின் நிருவாகக் குழுக்களில் அதிக எண்ணிக்கை கொண்ட இந்தியர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். அது நியாய மான கோரிக்கை என்பது உண்மையே. நிருவாகக் குழு உறுப்பினர்களில் பாதிப் பேராவது இந்தியர்களாக இருக்க வேண் டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். மாகாண கவர்னர்களின் நிருவாகக் கவுன்சிலின் உறுப்பினர்களின் எண் ணிக்கை ஆறாக உயர்த்தப்பட்டு, அவர் களில் மூன்று இந்தியர்களும், மூன்று அய்ரோப்பியர்களும் இருக்க வேண்டும் என்பதே அவர்கள் கருத்து என நம்பு கிறேன்.
அது ஒரு நல்ல திட்டம்தான்; எவர் ஒருவராலும் அதில் ஒரு குறையும் காண முடியாது. அத்துடன் அவர்கள் நிறுத்திக் கொண்டிருந்தால், அந்த ஆலோசனை நல்லதொரு ஆலோசனையாகக் கருதப் பட்டிருக்கும். மக்களின் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கும் நிருவாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். இப்போது அந்த ஆலோசனை நடைமுறை சாத்தியமற்ற ஒன்று என்று உண்மையான அரசியல் வாதிக்குத் தோன்றக்கூடும். கவுன்சி லுடன் கூடிய கவர்னர்தான் இந் நாட்டின் அரசாங்கமாகக் கருதப்படுகிறது. சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டால், பென்ட்லான்ட் பிரபு சென்னை அரசாங்கத்தின் தலைவராவார். அவருக்கு உதவி செய்ய மூன்று ஆலோ சகர்கள் உள்ளனர். இந்த ஆலோசகர் களின் பணி மற்றும் சென்னை அரசாங் கத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப் பானவர் கவர்னர் பென்ட்லான்ட் பிரபு தான். எனவே அது பென்ட்லான்ட் பிரபு வின் அரசாங்கம். இது போன்ற நடை முறை கொண்ட உலக நாடுகள் அனைத் திலும், அரசாங்கத்தின் தலைவர் தனது ஆலோசகர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் வழக்கமானது.
ஒரே ஒரு நாடு தவிர மற்ற அனைத்து நாகரிக நாடுகளிலும் இதுதான் வழக்கம். இதற்குக் காரணம், அவ்வாறு தேர்ந்தெடுக்க அவரை அனுமதிக்கவில்லை என்றால், அவர்களின் செயல்பாடுகளுக்கு அவரைப் பொறுப்பாக்க முடியாது என்பதுதான். எனது ஆலோசகர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுத்தீர்கள்; அவர்களுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. அவர்களின் செயல்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று கவர்னர் கூறக்கூடும். அதற்கு உங்களால் என்ன பதில் கூறமுடியும்? கூறுவதற்கு எந்த பதிலும் இல்லை. வேறு நபர்களால் தன் மீது திணிக்கப்பட்ட ஆலோசகர்களைக் கொண்ட அரசாங்கத்தின் தலைவராக இருக்க சுயமரியாதை உள்ள எந்த மனிதரும் ஒப்புக்கொள்ள மாட்டார். தனது ஆலோசகர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரம் இல்லாவிட்டால், எந்த மரியாதைக்குரிய மனிதரும் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார். இது முற்றிலும் நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கையாகும். இந்த விதிக்கு விலக்கான ஒரு நாடு உள்ளது என்று நான் முன்பு குறிப்பிட் டுள்ளேன்.
ஸ்விட்சர்லாந்துதான் அந்த நாடு. ஃபெடரல் கவுன்சில் உறுப்பினர்களால் பெடரல் கவுன்சிலின் தலைமை நிருவாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஸ்விட்சர்லாந்து நாடு தனித்தன்மை வாய்ந்த ஒரு நாடாகும். அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தை நீங்கள் படித்துப் பார்த்தீர்களேயானால், மக்கள் தங்களைத் தாங்களே நேரடியாக ஆண்டு கொள்வது என்ற தனித் தன்மை வாய்ந்த கருத்தினைக் கண்டு நீங்கள் திகைப்படைந்து இருப்பீர்கள். ஸ்விட் சர்லாந்து ஃபெடரல் அரசாங்கத்தின் நிருவாகத் தலைமை என்பது ஸ்விஸ் ஃபெடரல் கவுன்சிலாகும். இரு சட்ட மன்றங்களின் கூட்டுக் கூட்டத்தில் அவற்றின் உறுப்பினர்களால், 3 ஆண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் 7 உறுப்பினர்களைக் கொண்டது இந்தக் கவுன்சில். இரு அவைகளிலும் உறுப் பினராக ஆகத் தகுதி பெற்ற எவர் ஒருவரையும் கவுன்சில் உறுப்பினராக ஃபெடரல் சட்டமன்றம் தேர்ந்தெடுக்க லாம். சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஃபெடரல் கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் தனது சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கான பணியை செய்யாமல் இருக்க வேண்டும். சட்டமன்றக் கூட்டங்களிலும், விவாதங் களிலும் அவர் கலந்து கொள்ளலாம். ஆனால் வாக்களிக்கும் உரிமை அவருக்கு இல்லை.
ஸ்விஸ் நிருவாகக் கவுன்சில் உறுப்பினர்கள் என்பவர்கள் சட்டமன்றத்தின் பணியாளர்களே அன்றி, தலைவர்கள் அல்ல. சென்னை மாநகராட்சியின் புதிய அமைப்புச் சட்டத்தின்படி கூறப்பட்டுள்ள நகராட்சி ஆணையரின் பணியைப் போன்றது இந்த ஸ்விஸ் நிருவாகக் குழுவின் பணியாகும். ஆணையரின் நிலையே மேலானது என்று கூறலாம். ஏனென் றால் அவருக்கென்று சில அதிகா ரங்கள் உள்ளன. மக்கள் கூறுவதற்கு அடிபணிவதைத் தவிர, ஸ்விஸ் நிரு வாகக் குழு உறுப்பினர்களுக்கு வேறு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. நாடாளுமன்ற நடைமுறை செயல்படும் வேறு எந்த ஒரு நாட்டிலும், இத்தகைய தேர்தல் என்னும் நடைமுறை, நடை முறை சாத்தியம் அற்றதாகவும், செயல் பட இயலாததாகவும் இருக்கும். அந்த நடைமுறையில் ஒரு மாற்றத்தை ஏன் இங்கே கேட்கிறார்கள் என்பது உண்மை யில் எனக்குப் புரியவே இல்லை.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)
http://viduthalai.in/new/page-2/5449.html
அரசியல் சீர்திருத்தத்தைக் கேட்கும்போது, ஒன்றிரண்டு விஷயங்களை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்று- வெறும் உணர்வுகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்த, நடைமுறைப் படுத்தப்படும் சாத்தியக் கூறுகள் அற்ற ஒரு சீர்திருத்தம் எந்த நன்மையையும் அளிக்காது. நடைமுறை சாத்தியம் உள்ள, எவர் ஒருவராலும் நடைமுறைப் படுத்தப்பட இயன்ற ஒன்றைத்தான் நீங்கள் கேட்கவேண்டும். வெறும் உணர்வுகளின் அடிப்படையில் இது இது எங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் கேட்டால், அதற்கு எந்த அரசியல்வாதியும் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்; உங்களின் கோரிக்கை இங்கிலாந்து நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பகுத்தாய்வு செய்யப்படும் போது சுயஆட்சிக்குத் தகுதியானவர்கள் என்று கூறிக் கொண்ட மனிதர்கள் இவர்கள்தானா என்று அங்கிருக்கும் அரசியல்வாதிகள் கேட்கக்கூடும். ஆனால், இத்தகைய கோரிக்கைகளைக் கேட்பவர்கள், நடைமுறை சாத்தியமான செயல்களைச் செய்யும் மனிதர்களல்ல. எப்போதும் நீங்கள் பயப்பட வேண்டிய ஆபத்து அதுதான். உங்கள் கோரிக்கைகளை முன் வைக்கும்போது, அவை நடை முறை சாத்தியமானவையா என்பதை சோதித்துப் பாருங்கள்.
பத்தொன்பது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனு
ஹோம் ரூலைப் பற்றி பேச்சை விட்டுவிட்டு, நமது அடுத்த தவணை அரசியல் சீர்திருத்தத்திற்காக நான் கேள்விப்பட்ட நடைமுறை சாத்திய முள்ள திட்டத்தைப்பற்றிப் பேச விரும்பு கிறேன். ஆங்கிலப் பேரரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் பத்தொன்பது பேர் வைஸ்ராய் அவர்களுக்கு சமர்ப்பித்த கோரிக்கை மனு பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கக்கூடும். இந்த ஆவணத்தைப் பற்றிய வேறுபட்ட கருத்தை வெளியிட்ட மைக்காக நான் திட்டப்பட்டேன், தாக்கப்பட்டேன், கண்டணம் தெரிவிக் கப்பட்டேன். இந்த ஆவணத்தின் கருத் தில் இருந்து நான் மாறுபட்டிருந்தேன். நடைமுறை சாத்தியமற்ற, செயல்பட இயலாத திட்டம் அது என்பது எனது கருத்து. ஒரு சில நிமிடங்கள் எனக்கு அளித்தால், அம்மனுவின் திட்டங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் என்னால் மறுத்துப் பேச முடியும்.
நிருவாகக் குழு
முதல் செயல்திட்டமே நிருவாகக் குழுவைப் பற்றியது. வைஸ்ராயின் நிருவாகக் குழு மற்றும் மாகாண ஆளுநர் களின் நிருவாகக் குழுக்களில் அதிக எண்ணிக்கை கொண்ட இந்தியர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். அது நியாய மான கோரிக்கை என்பது உண்மையே. நிருவாகக் குழு உறுப்பினர்களில் பாதிப் பேராவது இந்தியர்களாக இருக்க வேண் டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். மாகாண கவர்னர்களின் நிருவாகக் கவுன்சிலின் உறுப்பினர்களின் எண் ணிக்கை ஆறாக உயர்த்தப்பட்டு, அவர் களில் மூன்று இந்தியர்களும், மூன்று அய்ரோப்பியர்களும் இருக்க வேண்டும் என்பதே அவர்கள் கருத்து என நம்பு கிறேன்.
அது ஒரு நல்ல திட்டம்தான்; எவர் ஒருவராலும் அதில் ஒரு குறையும் காண முடியாது. அத்துடன் அவர்கள் நிறுத்திக் கொண்டிருந்தால், அந்த ஆலோசனை நல்லதொரு ஆலோசனையாகக் கருதப் பட்டிருக்கும். மக்களின் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கும் நிருவாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். இப்போது அந்த ஆலோசனை நடைமுறை சாத்தியமற்ற ஒன்று என்று உண்மையான அரசியல் வாதிக்குத் தோன்றக்கூடும். கவுன்சி லுடன் கூடிய கவர்னர்தான் இந் நாட்டின் அரசாங்கமாகக் கருதப்படுகிறது. சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டால், பென்ட்லான்ட் பிரபு சென்னை அரசாங்கத்தின் தலைவராவார். அவருக்கு உதவி செய்ய மூன்று ஆலோ சகர்கள் உள்ளனர். இந்த ஆலோசகர் களின் பணி மற்றும் சென்னை அரசாங் கத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப் பானவர் கவர்னர் பென்ட்லான்ட் பிரபு தான். எனவே அது பென்ட்லான்ட் பிரபு வின் அரசாங்கம். இது போன்ற நடை முறை கொண்ட உலக நாடுகள் அனைத் திலும், அரசாங்கத்தின் தலைவர் தனது ஆலோசகர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் வழக்கமானது.
ஒரே ஒரு நாடு தவிர மற்ற அனைத்து நாகரிக நாடுகளிலும் இதுதான் வழக்கம். இதற்குக் காரணம், அவ்வாறு தேர்ந்தெடுக்க அவரை அனுமதிக்கவில்லை என்றால், அவர்களின் செயல்பாடுகளுக்கு அவரைப் பொறுப்பாக்க முடியாது என்பதுதான். எனது ஆலோசகர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுத்தீர்கள்; அவர்களுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. அவர்களின் செயல்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று கவர்னர் கூறக்கூடும். அதற்கு உங்களால் என்ன பதில் கூறமுடியும்? கூறுவதற்கு எந்த பதிலும் இல்லை. வேறு நபர்களால் தன் மீது திணிக்கப்பட்ட ஆலோசகர்களைக் கொண்ட அரசாங்கத்தின் தலைவராக இருக்க சுயமரியாதை உள்ள எந்த மனிதரும் ஒப்புக்கொள்ள மாட்டார். தனது ஆலோசகர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரம் இல்லாவிட்டால், எந்த மரியாதைக்குரிய மனிதரும் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார். இது முற்றிலும் நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கையாகும். இந்த விதிக்கு விலக்கான ஒரு நாடு உள்ளது என்று நான் முன்பு குறிப்பிட் டுள்ளேன்.
ஸ்விட்சர்லாந்துதான் அந்த நாடு. ஃபெடரல் கவுன்சில் உறுப்பினர்களால் பெடரல் கவுன்சிலின் தலைமை நிருவாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஸ்விட்சர்லாந்து நாடு தனித்தன்மை வாய்ந்த ஒரு நாடாகும். அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தை நீங்கள் படித்துப் பார்த்தீர்களேயானால், மக்கள் தங்களைத் தாங்களே நேரடியாக ஆண்டு கொள்வது என்ற தனித் தன்மை வாய்ந்த கருத்தினைக் கண்டு நீங்கள் திகைப்படைந்து இருப்பீர்கள். ஸ்விட் சர்லாந்து ஃபெடரல் அரசாங்கத்தின் நிருவாகத் தலைமை என்பது ஸ்விஸ் ஃபெடரல் கவுன்சிலாகும். இரு சட்ட மன்றங்களின் கூட்டுக் கூட்டத்தில் அவற்றின் உறுப்பினர்களால், 3 ஆண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் 7 உறுப்பினர்களைக் கொண்டது இந்தக் கவுன்சில். இரு அவைகளிலும் உறுப் பினராக ஆகத் தகுதி பெற்ற எவர் ஒருவரையும் கவுன்சில் உறுப்பினராக ஃபெடரல் சட்டமன்றம் தேர்ந்தெடுக்க லாம். சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஃபெடரல் கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் தனது சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கான பணியை செய்யாமல் இருக்க வேண்டும். சட்டமன்றக் கூட்டங்களிலும், விவாதங் களிலும் அவர் கலந்து கொள்ளலாம். ஆனால் வாக்களிக்கும் உரிமை அவருக்கு இல்லை.
ஸ்விஸ் நிருவாகக் கவுன்சில் உறுப்பினர்கள் என்பவர்கள் சட்டமன்றத்தின் பணியாளர்களே அன்றி, தலைவர்கள் அல்ல. சென்னை மாநகராட்சியின் புதிய அமைப்புச் சட்டத்தின்படி கூறப்பட்டுள்ள நகராட்சி ஆணையரின் பணியைப் போன்றது இந்த ஸ்விஸ் நிருவாகக் குழுவின் பணியாகும். ஆணையரின் நிலையே மேலானது என்று கூறலாம். ஏனென் றால் அவருக்கென்று சில அதிகா ரங்கள் உள்ளன. மக்கள் கூறுவதற்கு அடிபணிவதைத் தவிர, ஸ்விஸ் நிரு வாகக் குழு உறுப்பினர்களுக்கு வேறு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. நாடாளுமன்ற நடைமுறை செயல்படும் வேறு எந்த ஒரு நாட்டிலும், இத்தகைய தேர்தல் என்னும் நடைமுறை, நடை முறை சாத்தியம் அற்றதாகவும், செயல் பட இயலாததாகவும் இருக்கும். அந்த நடைமுறையில் ஒரு மாற்றத்தை ஏன் இங்கே கேட்கிறார்கள் என்பது உண்மை யில் எனக்குப் புரியவே இல்லை.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)
http://viduthalai.in/new/page-2/5449.html

No comments:
Post a Comment